Tuesday, June 14, 2011

யார் இந்த சிவசங்கர மேனன்கள்?

யார் இந்த சிவசங்கர மேனன்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது சரியல்ல என்று தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்காக சென்னையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பாராட்டி 13.6.2011 திங்கட்கிழமையன்று பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது அதில் இந்திய பொதுவுடமைக்கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் தோழர்.சி.மகேந்திரன் பேசியதாவது.

"இந்தியாவில் பிரதமருக்கு அடுத்த நிலையில் Protocall எனப்படும் அரசு மரியாதை உள்ளவர் மாநில முதல்வரே ஆவார். ஆனால் அயல்நாடான இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அதிபர்களிடம் எனன விவகாரங்களை பேசப்போகிறார்கள் என்ன ஒப்பந்தம் போடப்போகிறார்கள் என்பதை முதல்வரிடம் விவாதிக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வரவேண்டுமே ஒழிய சிவசங்கர மேனன் போன்ற அதிகாரிகள் அல்ல. மேலும் இலங்கை அதிபர்களிடம் பேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே செல்லவேண்டும். பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டின் அதிபர்களிடம் வெளியுறவு அமைச்சர்களே பேசுகின்றார்கள் அல்லது பிரதமர் பேசுகின்றார் ஆனால் இலங்கைக்கு மட்டும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசுகின்றார்ள் அதுவும் தமிழருக்கு எதிரான கருத்து உள்ள அதிகாரிகள் பேசுகின்றார்கள் அவர்கள் தமிழக மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்காமல் தமிழகத்திலும் அயல் நாடுகளில் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களை சற்றும் மதிக்காமல் இலங்கை அதிபர்களுக்கு வால் பிடிக்கும் வேலையை செய்கின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக நிலை எடுக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, கொள்கை முடிவுகளில் தமிழர்களுக்கு பாதகமாக நிலை எடுக்கும் இந்த சிவசங்கர மேனன்களை இனி வரும் காலங்களில் நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழக முதல்வரும் அவர்களை சந்திக்க மறுக்க வேண்டும்" என்று சி.மகேந்திரர்ன் உரையாற்றினார் அவரின் உரை நல்ல வரவேற்பை பெற்றது.

No comments:

Post a Comment